ஞாயிறு, 26 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :499

திருக்குறள் – சிறப்புரை :499
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தொடு ஒட்டல் அரிது.௪௯௯
பகைவர். அரண் வலிமையும் பிற சிறப்புகளும் இல்லாதிருப்பினும் அவர்கள் வாழும் இடத்திலேயே சென்று போர் செய்து வென்றுவிடல் என்பது அரிய செயலாகும்.
“ புலி சேர்ந்து போகிய கல் அளைபோல
 ஈன்ற வயிறோ இதுவே
 தோன்றுவன் மாதோ போர்க் களத்தானே.” – புறநானூறு.

புலி தங்கியிருந்து பின் இடம் பெயர்ந்து சென்ற கற்குகை போல. அவனைப் பெற்ற வயிறு இதுவே. அவனோ போர்க் களத்தில் காணத்தக்கவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக