செவ்வாய், 14 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :487

திருக்குறள் – சிறப்புரை :487
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.. ---- ௪௮௭
அறிவுடையோர், தமக்குத் தீமை செய்தாரிடத்து உடனே தம் பகைமையை பலர் அறிய வெளிப்படுத்தாமற், தக்க காலம் வரும்வரை காத்திருப்பர்.
“ வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே.” இனியவை நாற்பது.

வெற்றிபெற வேண்டின் எவரிடத்தும் சினம் கொள்ளாத உறுதி மிகவும் இனிது.

1 கருத்து: