சனி, 1 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :580
பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். ---௮0
எல்லோரிடத்தும் இனிமையாகப் பழகும் பண்புடையார் நண்பர்கள் தமக்கு நஞ்சிடுவதைக் கண்டும் அவர்தம் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக அதனையும் உண்பர்.
“ முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்.” ---- நற்றிணை.

நட்பைப் போற்றும் நற்பண்பு உடையார், நண்பர்கள் நஞ்சைக் கொடுத்தாலும் தயங்காது உண்டு, நட்பைப் பேணுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக