செவ்வாய், 4 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :583

திருக்குறள் – சிறப்புரை :583
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொள்ளக்கிடந்தது இல். --- ௮௩
ஒற்றரால் நாட்டில் நடப்பதை அன்றாடம் அறிந்துகொள்ள முயலாத மன்னனுக்குப் பகைவென்று வெற்றி அடைவதற்கு வழி யாதும் இல்லை.
“ உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
 செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்.” – சிலப்பதிகாரம்.

வாழும் காலத்தை வறிதே கழிக்காமல், இறந்தபின் எய்தும் மறுமை உலகுக்கு உற்ற துணையாகிய அறவழியைத் தேடுங்கள்.

1 கருத்து: