செவ்வாய், 18 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :596

திருக்குறள் – சிறப்புரை :596
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.----- ௯௬
மனத்துள் நினைப்பவையெல்லாம் உயர்ந்த எண்ணங்களாகவே இருத்தல் வேண்டும் ; உயர்ந்த எண்ணங்கள்  கைகூடாவிட்டாலும் அங்ஙனம் எண்ணுவது இகழ்ச்சிக்கு உரியதன்று.
“நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே.”  திருமுருகாற்றுப்படை.

நீ வீடுபேறு வாய்க்க வேண்டும் என்று விரும்பினாயானால் உன் மனத்தில் எழுந்த அவா கைகூடுவதோடு நல்வினைப் பயனால் நீ நினத்தவை எல்லாம் இப்பொழுதே அடையப் பெறுவாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக