திங்கள், 17 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :595

திருக்குறள் – சிறப்புரை :595
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. ---
நீர்நிலையின் அளவிற்கேற்ப நீர்ப்பூக்களின் தண்டுகள்  உயர்ந்து நிற்கும் ; மாந்தர்தம் உள்ள ஊக்கத்தின் அளவே அவர்தம் உயர்வும் அமையும்.
“ மனத்து அனையர் மக்கள் என்பார்.”--- நாலடியார்.

மக்கள் தங்கள் மனத்தின் இயல்புக்கேற்பவே இருப்பர்.

1 கருத்து: