செவ்வாய், 25 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :601

திருக்குறள் – சிறப்புரை :601
மடி இன்மை
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும். ----- ௬0௧
நல்ல குடியில் பிறந்த ஒருவனின் குடிப்பெருமை என்னும் குன்றாது ஒளிவீசும் விளக்கானது அவனுடைய சோம்பல் என்னும் மாசு படிந்து ஒளிமங்கி அழியும்.
”செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
உறுமிடத்து உவக்கும் உதவி ஆண்மையும்
இல் இருந்து அமைவோர்க்கு இல்…. “ – அகநானூறு.

தம் பகைவர் செறுக்கினை அழித்தலும் தம்மைச் சேர்ந்தோர்க்கு ஓர் ஊறு நேர்ந்தவிடத்து  உதவி செய்தலாகிய ஆண்மையும் வீட்டில் சோம்பி இருப்போர்க்கு இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக