வெள்ளி, 28 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :604

திருக்குறள் – சிறப்புரை :604
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றுஇ லவர்க்கு. ----- ௬0௪
சோம்பலில் சுகம் கண்டு உழைக்கும் முயற்சி   இல்லாதவரின் குடிப்பெருமை அழியும் குற்றமும் பெருகும்.
“பொய்யாற்று ஒழுக்கம் பொருள் எனக்கொண்டோர்
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ..? – மணிமேகலை.

பொய்யான நெறியில் ஒழுகும் ஒழுக்கத்தையே நோக்கமாகக் கொண்டவர்கள் துன்பத்தினின்று நீங்கித் தப்பித்தார் என்பதும் உண்டோ… ? இல்லையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக