சனி, 8 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :586
துறந்தார் அடிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று. ----  ௮௬
துறவுக்கோலம் பூண்டு வேற்று நிலத்திற்குச் சென்று ஆண்டு நிகழ்பவற்றை ஆராய்ந்து அறிய முற்படும்பொழுது, பிறர் தன்னை ஐயுற்றுத் துன்புறுத்தி வினவ  நேர்ந்தாலும் அச்சமுற்றுத் தன்னை வெளிக்காட்டாதவனே ஒற்றன் ஆவான்.
ஒற்றன், இடத்திற்கேற்ப வேடம் புனைவதில் வல்லவனாகவும் இருத்தல் வேண்டும்.
” கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே” – பதிற்றுப்பத்து.

கூற்றுவனே வெகுண்டு வந்தாலும் அவனையும் தோற்றோடச் செய்யும் ஆற்றல் மிக்கவன்,(இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக