ஞாயிறு, 9 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :587
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தை
ஐயப்பாடு இல்லதே ஒற்று. ---- ௮௭
மறைமுகமாகச் செய்யப்படும் குற்றச் செயல்களை வேவு பார்த்துத் தான் கேட்டறிந்த செய்திகளின் உண்மைத் தன்மையை ஐயத்திற்கு இடமின்றி உறுதிசெய்து கொள்ளும் வல்லமை உடையவனே ஒற்றன் ஆவான்.
“ வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்.” சிலப்பதிகாரம்.

வாய்மை தவறாமல் உயிர்கள் அனைத்தையும் காப்பவர்களுக்குக் கிட்டாத அரும்பொருள் என்று ஏதேனும் உண்டோ..? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக