புதன், 5 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :584

திருக்குறள் – சிறப்புரை :584
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று. ---௮௪
மன்னனுக்கு உற்றதுணையாக உடனிருந்து பணிசெய்வோரையும் ; தமக்குச் சுற்றமாகச் சூழ்ந்து இருப்பாரையும் ; வஞ்சகமாகத் தீங்கு செய்ய முயல்வாரையும் மேலும் வேண்டியவர் வேண்டாதார் என்ற வேறுபாடின்றி அனைவரையும் ஆராய்ந்து அறிதலே ஒற்றறிதலாகும்.
“ குடப்பால் சில் உறை போலப்
 படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே.” புறநானூறு.
குடம் நிறைந்த பாலின்கண் தெளித்த சிலவாகிய பிரை, பால் முழுவதையும் கெடுத்துவிடுவதைப் போல, பகைவரின் படைத்திரள் முற்றும் கெட்டு அழிய, அவன் ஒருவனே காரணமாயினன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக