வியாழன், 27 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :603

திருக்குறள் – சிறப்புரை :603
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து. ---- ௬0௩
அழிக்கும் ஆற்றலுடைய  சோம்பலைத் தன் மடியிலேயே கட்டிக்கொண்டு வீணே பொழுதைக் கழிக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி அவன் அழியுமுன்னே அழிந்துபோகும்.
“வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. – குறள். 439

ஒருவன். எக்காலத்தும் தன்னைத் தானே வியந்து போற்றிக் கொள்ளக்கூடாது ; நன்மை தராத செயலை விரும்பவும் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக