திங்கள், 31 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :607

திருக்குறள் – சிறப்புரை :607
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்று இலார். ---- ௬0௭
முயற்சியின் பெருமை அறியாது சோம்பலை விரும்பித் துய்ப்பவர் பிறரால் கண்டிக்கப்பட்டுப் (திருந்தாதவர்) பலரும் இகழ்ந்துபேசும் நிலையை அடைவர்.
” தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
 நிலையின் இழிந்தக் கடை. --- குறள். 964

நற்குடிப் பிறந்த மாந்தர் தம் உயர்ந்த நிலையைவிட்டுத் தாழ்ந்தவழி  தலையிலிருந்து வீழ்ந்த மயிரினைப் போன்றவர் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக