சனி, 22 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :600

திருக்குறள் – சிறப்புரை :600
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு. ----- ௬00
ஒருவனுக்கு உரம் என்பது ஊக்கமே; நெஞ்சுரம் இல்லாதவர் மரம்; தோற்றத்தில் மரத்தினின்று வேறுபட்டு மக்கள் என்றாயினர்.
முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே.” -- பட்டினப்பாலை.

நெஞ்சே ! அரிய பெரிய சிறப்புவாய்ந்த காவிரிப்பூம் பட்டினத்தைப் பரிசாகப் பெறுவதாயிருந்தாலும் நீண்ட கரிய கூந்தலையும் ஒளி பொருந்திய அணிகலன்களையும் உடைய என் காதலியை விட்டுப்பிரிந்து பொருள்தேடச் செல்ல மாட்டேன் … நன்றே வாழிய என் நெஞ்சே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக