சனி, 15 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :593

திருக்குறள் – சிறப்புரை :593
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். --- ௯௩
 தேடிய செல்வத்தை எல்லாம் இழந்தபோதும் அழியாத செல்வமாகிய ஊக்கத்தைக் கைப்பொருளாகக் கொண்டவர்கள் ஒருபோதும் கலங்க மட்டார்கள்.
“இசையாது எனினும் இயற்றி ஓராற்றல்
அசையாது நிற்பதாம் ஆண்மை….----- நாலடியார்.
எடுத்துக்கொண்ட ஒரு செயல் தன்னால் நிறைவேற்ற இயலாததாயிருந்தாலும் அதனை முயன்று முடித்தலே ஆண்மைக்கு அழகாம்.


1 கருத்து: