வியாழன், 20 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :598
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு. ---- ௯௮
உள்ள உறுதியுடன் ஊக்கம் இல்லாதவர் உலகத்தாருள் தாமே வண்மை உடையேம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் தகுதியை அடைய மாட்டார்கள்.
” உயர் குடியுள் பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும்
பேர் ஆண்மை இல்லாக் கடை.” --- நாலடியார்.

தன் பெயரைக் கல்லில் எழுதக்கூடிய வகையில் சிறந்த செயல்களைச் செய்து புகழ்பெற மாட்டாதவன் உயர்ந்த குடியிலே பிறந்ததால் மட்டும் என்ன பயன் உண்டாம்..? ஒரு பயனும் இல்லை என்பதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக