வெள்ளி, 14 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :592

திருக்குறள் – சிறப்புரை :592
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். ---- ௯௨
உள்ளம் நிறைந்த ஊக்கமே (அழிவில்லாத) நிலையான
செல்வமாகும்; பிற செல்வம் எல்லாம் நில்லாது நீங்கிவிடும்.
”உரனுடை உள்ளத்தைச் செய்பொருள் முற்றிய
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்
இளமையும் காமமும் நின்பாணி நில்லா.” – கலித்தொகை.
தலைவ..! நீதான் வலிய மனத்தைக் கொண்டவன் தேடும் பொருளை ஈட்டிய பின்னர் அப்பொருளே இன்பம் என்று கொண்டாய். இளமையும் காமமும் நின்னிடத்தே நிலைபெற்று நில்லாமல் நாள்தோறும் கழியும்.


1 கருத்து: