திங்கள், 10 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :588
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். --- ௮௮
ஓர் ஒற்றன் உளவறிந்து கொண்டுவந்த செய்தியை இன்னொரு ஒற்றன் கொண்டுவரும் செய்தியோடு ஒப்பிட்டு ஆராய்ந்து உண்மையை உறுதிசெய்து கொள்ளல் வேண்டும்.
‘” புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனாம் …..” –பழமொழி.
அறிவு மிக்கவரது அறிவினை ஆராய்ந்து அறிதல், அறிவு மிக்கவர்க்கே உளதாம்.


1 கருத்து: