வியாழன், 6 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :585
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று. ---
பிறரால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வேடம் பூண்டு, யாரேனும் ஐயப்பட்டுத் தன்னைக் கண்காணித்தாலும் அஞ்சாது, எந்நிலையிலும் தான் உற்று நோக்கி ஆராய்ந்து அறிந்த செய்திகளை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.
“கற்றது ஒன்று இன்றிவிடினும் கருமத்தை
அற்றம் முடிப்பான் அறிவுடையான்.” பழமொழி.

சிறிதும் கல்வியறிவு இல்லாவிட்டாலும் செயல் திறனில் சிறந்து, தான் மேற்கொண்ட செயலைச் செய்து முடிப்பான் அறிவுடையவன்.

1 கருத்து: