சனி, 29 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :605

திருக்குறள் – சிறப்புரை :605
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். ---- ௬0௫
காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளைக் கருத்தில் கொள்ளாமல் சோம்பி இருத்தல் காலம் நீட்டித்தல் மறத்தல் அளவுக்கு அதிகமான தூக்கம் ஆகிய இந்நான்கும் கெட்டு அழிவார் விரும்பிப் பயணிக்கும் மரக்கலமாகும்.
“வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்புஇலன் பற்றார்க்கு இனிது. --- குறள். 865

ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல் பழியையும் பார்க்காமல்  நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கு எளியவன் ஆவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக