புதன், 26 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :602

திருக்குறள் – சிறப்புரை :602
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர். ---- ௬0௨
உழைப்பால் உயர்ந்த தம்குடியை மேலும் உயர்த்த நினைப்பவர் சோம்பலுக்கு அடிபணியாது சோம்பல் மடியுமாறு மேன்மேலும் முயன்று முன்னேற வேண்டும்.
”நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச் சாம்
குலனும் குடிமையும் கல்லாமக் கீழ்ச் சாம்” – நான்மணிக்கடிகை.
அழகும் இளமையும் வறுமையால் கெடும் ; குலத்து உயர்வும் குடிப்பெருமையும் கல்லாமையால் கெடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக