திங்கள், 9 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :931


94. சூது
திருக்குறள் -சிறப்புரை :931
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.—௯௩௧
வெற்றிபெறினும் சூதாட்டத்தை விரும்பாதே ; அப்படியே வெற்றிபெற்று பொருள் கிடைத்தாலும் அஃது இரையில் மறைந்திருக்கும் தூண்டில் முள்ளை அறியாது இரையெனப்பற்றிய மீனின் நிலையைப் போன்றதாகும்.
“ கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
 அகறல் ஓம்புமின் அறிவுடையீர்..” –நற்றிணை.
அறிவுடையீர்..! சூதாடு கருவி புரண்டு விழுதல் போல, நிலையில்லாத வாழ்க்கையின் பொருட்டுப் பொருளைத்தேடி, அருமையான நுங்கள் காதலியரை விட்டுப் பிரியாது கலந்தே இருங்கள்.

1 கருத்து: