தமிழமுது –107. –
தொல்தமிழர் உணவு –கள்..?
”அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும்
நஞ்சு.”
பதிற்றுப்பத்து
: விருந்து உணவு.
“தொல்பசி
உழந்த பழங்கண் வீழ
எஃகு போழ்ந்து அறுத்த வால்நிணக் கொழுங்குறை
மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு
நனைஅமை கள்ளின் தேறலொடு மாந்தி.” – 12: 15 –
18.
சுற்றத்தார் நீண்ட நாட்களாகப் பசொயால் வருந்திய துன்பம் தொலையுமாறு
நின் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) அரண்மனையில் அரிவாளால் பிளந்து அறுத்த வெள்ளிய நிணத்தோடு
கூடிய கொழுவிய துண்டாகிய ஆட்டின் இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட வெண்ணெல் அரிசியால் ஆன
வெண் சோற்றினைப் பூக்களின் அரும்புகளினால் அமைந்த தெளிந்த கள்ளோடு சேர்த்து உண்டனர்.
(நனையமை
கள் என்றது தென்னை, பனை, ஈந்து முதலியவற்றின் அரும்பு விரியாத செவ்விப் பாளையில் வடித்தெடுக்கப்படும்
கள். )
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE :
613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக