தமிழமுது
–137. – பண்டைய தமிழ்நாட்டின்
எல்லைகள்.
குறுங்கோழியூர்
கிழார் – புறநானூறு: 17.
”வடவேங்கடம்
= இமயமலை ’-4.
“தென்குமரி
வடபெருங்கல்
குண
குடா கடலா எல்லை
குன்று
மலை காடு நாடு
ஒன்றுபட்டு
வழிமொழிய
கொடிது
கடிந்து கோல் திருத்தி
படுவது
உண்டு பகல் ஆற்றி
இனிது
உருண்ட சுடர் நேமி
முழுது
ஆண்டோர் வழி காவல…”- 1- 8.
தென் திசையில் குமரி மலையையும் வட திசையில் இமயத்தையும் கிழக்கு மற்றும்
மேற்குத் திசைகளில் கடற் பரப்பையும் எல்லைகளாகக் கொண்டு இவ்விடைப்பட்ட நிலம் விளங்கும்.
இங்குக் குன்றும்மலையும் காடும் நாடும் எனப் பல்வகை நிலப்பகுதிகள் உடையோர் பலரும் ஒருமைப்பட்டு
வழிபடவும் தீயன போகவும் கோல் செங்கோலாகவும் உரிய இறைப்பொறுள் பொருளுண்டு நடுநிலையுடன்
தம் சுடர் விளங்கும் ஆணைச் சக்கரத்தை இனிதாகச் செலுத்தவும் வல்லவராய் வாழ்ந்தோர் நின்
முன்னோர், அவ்வாறிருந்து மண் முழுதும் ஆண்ட அன்னவர்தம் மரபினைக் காத்தவனே…!
என்று
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் புகழ்ந்து குறுங்கோழியூர் கிழார், பாடியது.
குண,குட, கடல் என்றாற்போலக் குமரிக்கண் கடல் கூறப்படாமையால் குமரி, கடல்
கோளுக்கு முன்னையது இப்பாட்டென்பது தெளிவாகும்.
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
……………………………………தொடரும்
…………………