வெள்ளி, 5 செப்டம்பர், 2025

தமிழமுது –115 – தொல்தமிழர் உணவு –கள்..?சுடுகாட்டுப் படையல் – கள் உணவு.

 

தமிழமுது –115 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

புறநாணூறு :சுடுகாட்டுப் படையல் – கள் உணவு.

 

”கள்ளி போகிய களரி மருங்கின்

வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு

புல்லகத்திட்ட சில் அவிழ் வல்சி

புலையன் ஏவ புல்மேல் அமர்ந்து உண்டு

அழல்வாய்] புக்க பின்னும்

 பலர் வாய்த்து இரார் பருத்து உண்டோரே.”-360: 16 – 21.

 

பாழிடமாகிய சுடுகாட்டில் கள்ளி ஓங்கி வளர்ந்துள்ள களர் நிலத்தின் பக்கத்தே, பாடையை நிறுத்திய பின்னர், பிணத்தை ப் புல் மீது கிடத்திக் கள்ளுடன் சில சோறாகிய உணவைப் புலையன் படைப்பான். புலையன் ஏவலுக்குப் புல்மேல் கிடத்திய பிணத்தைச் சுடலைத் தீயில் சுட்டெரித்தது கண்ட பின்னரும் உண்டு பருத்தோர் பலரும்  புகழ் வாய்த்து இருந்தார் இலர். (மேலும் காண்க -232.)

எட்டுத்தொகை முற்றிற்று.

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………தொடரும் ------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக