புதன், 3 செப்டம்பர், 2025

தமிழமுது –113. – தொல்தமிழரின் ஓணம் பண்டிகை.

 

தமிழமுது –113. –  தொல்தமிழரின் ஓணம் பண்டிகை.

மதுரைக் காஞ்சி , மாங்குடி மருதனார்.

“கணங்கொள் அவுணர் கடந்த பொலந்தார்

மாயோன் மேய ஓண நல்நாள்

கோணம் தின்ற வடுஆழ் முகத்த

சாணம் தின்ற சமம்தாங்கு தடக்கை

மறம்கொள் சேரி மாறுபொரு செருவில்

மாறாது உற்ற வடுப்படு நெற்றி

கரும்பு ஆர் கண்ணிப் பெரும்புகல் மறவர்.”- 590 – 596.

திரட்சிகொண்ட அவுணரை வென்ற, பொன்னால் செய்த மாலையை உடைய , கருநிறத் திருமால் பிறந்த ஓணமாகிய நன்னாளில் ஊரில் உள்ளார் விழா எடுப்பர்.

 இற்றை நாள் போர் செய்வோம் என்று கருதி மறவீரர்களைக் கொண்டிருக்கும் தெருக்களில், தம்முள் தாம் மாறுபட்டுப் போர் செய்வர்; மாறாமல் தம்மீது பட்ட அடியால் வடுவழுந்திய நெற்றியையும், சுரும்புகள் மொய்க்கும் போர்ப் பூவினையும், பெரிய விருப்பத்தினையும் உடைய மறவர்களால், திருமாலுக்கு மதுரையில் ஓணநாள் விழா நிகழ்த்தப்பெற்றது.; அவ்விழாவில் மறவர்கள் சேரிப்போர் நிகழ்த்துதல் வழக்கமாகும்.

(அவுணர் – அசுரர் ; கோணம் – தோட்டி ; சாணம் – தழும்பு ; சமம் – போர்.)

………………………………………………………………………..

தமிழமுது –114 –  தொல்தமிழர் உணவுகள்..?

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………………………தொடரும் ------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக