தமிழமுது –111. –
தொல்தமிழர் உணவு –கள்..?
”அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும்
நஞ்சு.”
கலித்தொகை :
கள்
உண்ணலாம் ; உண்ணக்கூடாது…!
”நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து
அறவினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது…” -99
: 1 -3.
கள்ளைஉண்ணுதல் ஆகாது என்று நீக்கின தேவர்க்கும் ; அதனை உண்ணுதலை
நீக்காத அசுரர்க்கும் நீக்குதலும் நீங்காமையும் ஆகிய அவ்விரண்டினையும் கைக்கொண்டு அறத்தொழிலாக
இன்பமுறுத்துபவர் அந்தணராகிய வியாழ குருவும்
வெள்ளி குருவும் இவ்விருவரும் வெவ்வேறு வகையினவாகச்
செய்துள்ள அரசியலைக்கூறும் ; நீதிகள் கூறும் வழியைத் தப்பாமல் ஆட்சி புரிபவன்
நீ.
(
அந்தணர் இருவர் என்றது தேவருக்குக் குருவாகிய
வியாழனும் அசுரர்க்குக் குருவாகிய வெள்ளியும்
ஆவர். வியாழன் இயற்றிய நூல் பாருகற்பத்தியம்
வெள்ளி இயற்றிய நூல் சுக்கிர நீதி. வியாழன், கள் உண்ணக் கூடாது என்றும் ; வெள்ளி, கள் உண்ணலாம்
என்றும் தம் நூலில் கூறியுள்ளனர்.)
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE :
613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
.………………………தொடரும்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக