தமிழமுது –122 – தொல்தமிழர் உணவு –கள்..?
”அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும்
நஞ்சு.”
மலைபடுகடாம்:
கள்ளின் தெளிவு …. தேறல்.
ஞெண்டு ஆடுசெறுவில் தராய்க்கண் வைத்த
விலங்கல் அன்ன போர்முதல் தொலைஇ
வளஞ்செய் வினைஞர் வல்சொ நல்க
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதித் தேறல்
இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள் தொறும் பெறுகுவீர்.”
460- 464.
நண்டுகள் ஆடித் திரியும் வயல்களுக்கு
அருகில் உள்ள மேட்டு நிலத்தில் அமைக்கப்பட்ட மலையைப் போன்ற நெற்போர்களை, அடிமுதல் அழித்துக் கடாவிட்டு, வளமையை உண்டாக்கும் உழவர்,
வலையர் மகளிர்க்கு நெல்லை முகந்து தருவர். அம்மகளிர், களிப்பு மிகுதியால் அசைகின்ற
மிடாவிலிருந்து வார்த்த , பசிய முளையால் ஆக்கிய கள்ளின் தெளிவை ஞாயிற்றின் இளங்கதிர்
எறிக்கும் காலத்தில் களங்கள் தோறும் நீவிர் பெறுகுவீர்.
(தசும்பு – கள் குடம் ; வாக்கிய – ஊற்றிய
; களமர் – உழவர் ; தேறல் – கள்ளின் தெளிவு.)
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக