ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

தமிழமுது –123 – தொல்தமிழர் உணவு –கள்..?.......தேனில் வடித்த , கள் , நெல்லால் ஆக்கிய கள்.

 

தமிழமுது –123 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

மலைபடுகடாம்.

தேனில் வடித்த , கள் , நெல்லால் ஆக்கிய, கள்.

 

“ஏறித் தரூஉம் இலங்குமலை தாரமொடு

வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல்

குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை

பழஞ் செருக்கு உற்ற நும் அனந்தை தீர

அருவி தந்த பழம்சிதை வெண்காழ்

வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை

முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை

பிணவுநாய் முடிக்கிய தடியொடு விரைஇ.” – 170 -177.

வள்ளல்  நன்னன் மலைநாட்டில் கூத்தர்கள் பெற்ற விருந்து.

கூத்தர்களே…! நீங்கள், பெண் நாய் ஓடிச் சென்று கெளவிக் கொண்டு வந்த உடும்பின் தசையொடு, வேகமாக ஓடும் கடமானின் ஓட்டத்தைக் கெடுத்து குறவர் கொன்ற கடமானின் இறைச்சியையும், முள்ளம் பன்றியைக் கொன்ற பசிய கொழுப்புடைய பிளக்கப்பட்ட தசையையும் கலந்து உண்டு.

 

 மூங்கில் குழாய்க்குள் நிரப்பப்பெற்ற முற்றிய தேனால் செய்யப்பட்ட கள்ளின் தெளிவைக் குறைவின்றி இடையிடையே நிரம்பப்பருகிப் பின் நெல்லால் சமைக்கப்பட்ட கள்ளினை உண்டு மகிழ்ந்து, விடியற்காலத்தில் கள்ளுண்டு மகிழ்ச்சியுற்ற நும்முடைய மயக்கம் தீரும்படி மலைக் குறவர் வழங்கும் நல்ல உணவுகளை உண்டு நிறைந்த மகிழ்ச்சியுடன் ‘விருந்தினைப் பெற்றேம்’  என்று உறவு முறையுடன் குறவர்கள் மலை மீது ஏறிக் கொணர்ந்த அரும் பொருள்களையும் பெற்றுச்  சென்வீராக.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………தொடரும் ----------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக