ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

தமிழமுது –135. – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்......”வடவேங்கடம் = இமயமலை ’-2.

 

தமிழமுது –135. –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

காரிக்கிழார் : புறநானூறு: - 6.

”வடவேங்கடம் = இமயமலை ’-2.

”வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்

குணாஅது கரைபொரு தெடுகடற் குணக்கும்

குடாஅது தொன்று முதிர் பெளத்தின் குடக்கும்.” : - 1-4.

வடக்கிலிருக்கும் பனி தங்கிய நெடிய இமயமலையின் வடக்கும் தெற்கில் இருக்கும் அச்சந்தரும் குமரியாற்றின் தெற்கும் கிழக்கில் இருக்கும் கரையை மோதுகின்ற சகரரால் தோண்டப்பட்ட கடலின் கிழக்கும் மேற்கில் இருக்கும் பழையதாய் முதிர்ந்த பெருங்கடலின் மேற்கும் கீழே இருக்கும் நிலம், வான், சுவர்க்கம் என்ற மூன்றும் சேர்ந்து அடுக்கிய முறையில் தோன்றும் நிலத்தில் நீடு வாழ்வாயாக என்று மேலும் பலவாறாகப் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் புகழ்ந்து பாடினராக.,

 

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக