சனி, 27 செப்டம்பர், 2025

தமிழமுது –134. – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்......”வடவேங்கடம் = இமயமலை ’

 

தமிழமுது –134. –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

பரணர் : பதிற்றுப்பத்து -43.

வடவேங்கடம் = இமயமலை ’

”கடவுள் நிலைய கல் ஓங்கு நெடுவரை

வடதிசை எல்லை இமயம் ஆக

தென் அம் குமரியொடு ஆயிடை அரசர்

முரசுடைப் பெருஞ் சமம் ததைய ஆர்ப்பு எழ

சொல் பல நாட்டைத் தொல்கவின் அழித்த

போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ.” – 6-11.

 

கடவுள் நிலையுடைய கற்கள் ஓங்கிய உயர்ந்த பக்க மலைகளைக் கொண்ட, இமயம் வடதிசை எல்லையாகவும் தெற்கில் குமரி(மலை) எல்லையாகவும் கொண்டு இடைப்பட்டஅரசர்களுடைய வலிமை கெடும்படி ஆரவாரித்து எழுந்து புகழ்ந்து சொல்லப்பட்ட பல நாடுகளின் பழமையான அழகினை அழித்த போர் வல்லமையும் பொன்னால் செய்யப்பட்டல்  மாலையினையும் உடைய குட்டுவன். ( கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்,)

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக