ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

தமிழமுது –128. – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள். ...”இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”-3.

 

தமிழமுது –128. –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”-3.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை.

 

கடல் கொண்ட தென்னாடு:

தலைச்சங்க நாட்களில்பஃறுளியாற்றிற்கும் குமரி யாற்றிற்கும் இடைப்பட்ட பகுதி, அளவிலும் சிறப்பிலும் பாண்டி நாட்டின் மிகச்சிறந்த பாகமாயிருந்திருக்க வேண்டும், அது 49 நாடுகளாக வகுக்கப்பட்டிருந்ததென்றும் இரண்டு ஆறுகட்குமிடையே 700 காவத அளவு அகன்று கிடந்ததென்றும் அறிகிறோம்.

இரண்டாவது கடல்கோளால் கவாடபுரம் கடல் கொள்ளப்பட்டது. அதன்பின் சிலகாலம் ‘மணவூர்’ பாண்டியன் தலைநகரமாக இருந்தது. பின் மூன்றாம் முறைக் கடல்கோளால் அம்மணவூரும், குமரியாறும் அழியவே, பாண்டியன் மதுரை வந்து அங்கே கடைச் சங்கத்தை நிறுவினான்.

சிலப்பதிகாரத்தில், மாடலன் குமரியாற்றில் நீராடியதாக்க் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், கதை முடிந்ததன்பின் எழுதப்பெற்ற பாயிரத்தில் தொடியோள் பெளவமெனக் குமரி கடலாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு காலப்பகுதிகளுக்குகிடையே அஃதாவது கோவலன் இறந்து சில நாட்களுக்குப் பின்னாகக் குமரியாறு கடல் கொள்ளப்பட்டுக் குமரிக் கடலாயிற்று. என்பார் ‘பேராசிரியர்.”

குமரியாறு கடலுள் அமிழ்ந்த காலத்தை ஒட்டியே ‘மணிமேகலையுள் கூறப்பட்டபடி காவிரிப்பூம்பட்டினம் கடல் வயமானது. வங்களாக் குடாக்கடலில் உள்ள சில பெரிய தீவுகளும் இதனுடன் அழிந்திருக்க வேண்டும். “நாகன் நன்னாட்டு நானூறி யோசனை வியன்பா தலத்து வீழ்ந்து கேடெய்தும்” என்றது காண்க.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக