திங்கள், 22 செப்டம்பர், 2025

தமிழமுது –129. – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.”இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”-4.

 

தமிழமுது –129. –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”-4.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை.

 

கடல் கொண்ட தென்னாடு:

கடல்கோள்களுக்குத் தப்பி நின்று திரும்பத் தமிழ் நாகரிகத்தை நிலைநாட்டிய நிலந்தரு திருவிற் பாண்டியனைத் திராவிட நாட்டரசனாகிய ’சத்தியவிரதன்’ என்றும் அரசமுனி,என்றும் மனு என்றும் வடநூல்கள் பலவாறாகக் கூறின.

 

ஊழி வெள்ளத்தினின்றும் தப்பி அவனது பேழை தங்கிய இடம் பொதிகைமலை ஆகும். இதனையே வடமொழியாளர் ‘ மலையமலை’ என்பர். இஃது அன்றைய பாண்டிநாட்டின் பெரும்பகுதிக்கும் வடக்கே இருந்ததால் வடமலை எனப்பட்டுப் பின் பெயர் ஒற்றுமையால் மேருவுடன் வைத்து எண்ணப்பட்டது.

இவ்வெள்ளக்கதைகள் பல புராணங்களிலும்காணப்படுபவை. அன்றியும் இராமாயணத்தில் இரண்டாம் ஊழியில் மணிகளாலும் முத்துகளாலும் நிரம்பப் பெற்றுச் சிறப்புடன் விளங்கிய பாண்டியன் தலைநகரான கவாடபுரத்தைப் பற்றியும்  மகாபாரதத்தில் அதன்பின் மூன்றாம் ஊழியில் தலைநகராயிருந்த மணவூரைப்பற்றியும் விவரிக்கப்பட்டிருப்பதையும் காண்க.

 

இங்ஙனம் இயற்கைச் சான்றுகளும் தென்மொழி, வடமொழி மேற்கோள்களும் ஒரே முகமாக நிலைநாட்டும் இவ்வுண்மையை எளிதில் மறுக்கவோ, புறக்கணிக்கவோ இயலாது.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக