சனி, 20 செப்டம்பர், 2025

தமிழமுது –127 – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள். ”இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”-2.

 

தமிழமுது –127 –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”-2.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை.

 

கடல் கொண்ட தென்னாடு:

இந்நாடு தமிழகத்தின் ஒரு பகுதி மட்டுமன்று ; தமிழரினம், தமிழ் நாகரிகம் என்பவற்றின் தாயகம் என்றே கூறவேண்டும்.ஏனெனில், தமிழைத் தொன்றுதொட்டு வளர்த்த சங்கங்கள் மூன்றனுள், தலைச்சங்கம் நடைபெற்ற ‘தென்மதுரையும்’ இடைச்சங்கம் நடைபெற்ற ‘கவாடபுரமும்’  இக்குமரிப் பகுதியிலேயே இருந்தன.

எனவே, தலைச்சங்க காலமாகிய முதல் ஊழியிலும் இடைச்சங்க காலமாகிய இரண்டாம் மூன்றாம் ஊழிகளிலும் இக்குமரிப் பகுதியிலேயே தமிழர் ஆட்சியும் நாகரிகமும் மொழி வளர்ச்சியும் ஏற்பட்டன என்பதும், தெற்கிலிருந்து கடல் முன்னேறி வரவர அவர்கள் வடக்கு நோக்கிப் பரந்து சென்றனர் என்பதும் விளங்குகின்றன.

 தமிழ் நூல்களில் மூன்று கடல்கோள்களைப் பற்றித் தெளிவான குறிப்புகள் காணப்படுகின்றன.

 முதல் கடல்கோளால் பஃறுளியாறும் குமரிக்கோடும் கடலில் கொள்ளப்பட்டன. பஃறுளியாற்றின் கரையிலிருந்த தென்மதுரையே பாண்டியன் தலைநகரம், தலைச்சங்கமிருந்த இடமும் ஆகும். இக்கடல்கோள் நிகழ்ந்தகாலத்திலிருந்த பாண்டியனே நெடியோன் என்று புறநானூற்றிலும், நிலந்தரு திருவிற் பாண்டியன் என்று ’தொல்காப்பியப் பாயிரச் செய்யுளிலும் ‘  குறிக்கப்பட்டவனாவன்.

கடல்கோளின் பின்னர் இவன் வடக்கே போய்க் கவாடபுரத்தைத் தலைநகராக்கிக்கொண்டான். இங்கேதான் இடைச்சங்கம் நடைபெற்றது………………..

 

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக