திங்கள், 8 செப்டம்பர், 2025

தமிழமுது –118 – தொல்தமிழர் உணவு –கள்..?இழிந்தோர், கள் உணவு கொள்வர்.

 

தமிழமுது –118 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

பத்துப்பாட்டு:  மதுரைக் காஞ்சி.

 

 இழிந்தோர், கள் உணவு கொள்வர்.

 

”சீருடைய விழுச் சிறப்பின்

விளைந்து முதிர்ந்த விழு முத்தின்

இலங்கு வளை இருஞ் சேரி

கள் கொண்டிக் குடிப் பாக்கத்து

நற்கொற்கையோர் நசைப் பொருந..” - -134 – 138.

 

 பெரிய நன்மக்களிடத்து மேம்பட்டுத் தோன்றுவதால் புகழை உடைய சிறந்த தலமைப் பண்பினை உடையாய் , சூல் முற்றி ஒளி முதிர்ந்து விளங்கும் சிறந்த முத்துக்களையும் விளங்கும் சங்கினையும் மூழ்கி எடுப்பவர் உறையும்  சேரிகளையும் கள்ளாகிய உணவை உண்ணும் இழிந்த குடிகள் தங்கியுள்ள சிற்றூர்களையும் கொண்ட கொற்கை என்னும் நல்ல ஊரில் உள்ளார் விரும்புதலையுடைய பொருநனே..! முத்து,சங்கு ஆகியவற்றைக் குளிப்பார் இருக்கைகளையும் புறஞ்சேரிகளைக் கொண்ட ஊராகும்.

நெடுஞ்செழியன், கொற்கை என்னும் துறைமுகப் பட்டினத்திற்கு உரிமை பூண்டவன் என்பது இதனால் உணரப்படும்.

 

(கொண்டி – கொள்ளப்படுவது ; உணவு  - ஈண்டு ,  கள் உணவு.; வளை – சங்கு.)

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………தொடரும் ------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக