தமிழமுது –124 – தொல்தமிழர் உணவு –கள்..?
”அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும்
நஞ்சு.”
மலைபடுகடாம்.
தேனில் வடித்த ,கள்ளின் தெளிவு.
“கரும் கொடி மிளகின் காய்த் துணர்ப் பசும் கறி
திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்
கான் நிலை எருமைக் கழை பெய் தீம் தயிர்
நீல் நிற ஓரி பாய்ந்து என நெடு வரை
நேமியின் செல்லும் நெய்க் கண் இறாஅல்
உடம்புணர்பு தழீஇய ஆசினி அனைத்தும்
குடமலைப் பிறந்த தண் பெரும் காவிரி
கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப
நோனாச் செருவின் நெடும் கடைத் துவன்றி.” – 521 - 529.
நன்னன் அரண்மனையில் காணப்படும்
பொருள்கள்:
கரிய மிளகுக் கொடிகளில் காய்ந்த
பசிய மிளகு, நல்ல மூங்கில் குழாயில் வைக்கப்பட்ட முற்றிய தேனால் வடிக்கப்பட்ட கள்ளின்
தெளிவு, காட்டில் வாழும் எருமையின் , மூங்கில்
குழாயில் தோய்க்கப்பட்ட தயிர், நெடிய மலைப் பகுதியில், முற்றியதால் நீல நிறத்தையுடைய
ஓரி பரவிய ஒழுகும் தேனைத் தன்னிடம் கொண்ட தேனடைகள் , நன்றாகத் தேர்ந்துகொள்ளப்பட்ட
ஆசினிப்பலா ஆகிய யாவும், குடகு மலையில் பிறந்த குளிர்ந்த பெரிய காவிரி ஆறு , சென்று
சேரும் மிக்க ஆழத்தையுடைய புகார் முகத்தைப் போல, பகைவர்கள் பொறுத்தற்கு இயலாத போரினையுடைய
நன்னனின் தலைவாசலில் ஒருங்கு திரண்டன.
கள்ளும் தயிரும் மூங்கில் குழாய்களில்
ஊற்றிப் பாதுகாக்கப்படுவன.
(கறி - மிளகு ; அமை
– மூங்கில் ; விளைந்த – முற்றிய ; ஓரி – நீல நிறம் ; இறால் – தேனடை ; ஆசினி – பலாவின்
ஒரு வகை ; அழுவம் – ஆழம்.)
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
.………பத்துப்பாட்டு………………முற்றிற்று
----------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக