தமிழமுது –132. –
பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.
” தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம்:”
”வடவேங்கடம் தென்குமரி- பனம்பாரனார்.”
மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார்.
”வடவேங்கடந்
தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து..”
அகலவுரை:
வடக்கே திருவேங்கட மலையின்
வட பகுதி, தெற்கே குமரிமலையின் தென்பகுதி, கிழக்கும் மேற்கும் கடல்கள். இந்நான்கும்
எல்லையாக, இவற்றுக்கு உட்பட்ட பெருநாடே தமிழ் மொழி பேசும் நன்மக்கள் வாழும் நிலமாகும்.
திறனுரை:
“வடவேங்கடம்
தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து” என்பதன் விளக்கம். கிழக்கும் மேற்கும் கடல்கள்;
நிலங்கள் இல்லை; ஆதலின் இத்திசைகளுக்கு எல்லை
வெளிப்படை, வேங்கட மலையின் வடபகுதிவரையும் குமரிமலையின் தென்பகுதி வரையும் தமிழக எல்லைக்கு
உட்பட்டன என்பது வடவேங்கடம், தென்குமரி என்ற அடைகளின் கருத்து. வடவேங்கடத்துக்கு வடக்கிலும்
தென்குமரிக்குத் தெற்கிலும் வேற்று மொழிகளும் வேற்றரசுகளும் தொல்காப்பியர் காலத்து
இருந்தன ; ஆதலின் இந்த இரு திசைகளுக்கு மட்டும் நிலவெல்லைகள் குறித்தார்.
இதனையுட்கொண்டே, “ நாற்பெயரெல்லை யகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது” என்று தொல்காப்பியர் செய்யுளியலில்
தெரிவிப்பர். இன்று காண்பதுபோல் தெற்கும் குமரிக்கடலாக இருந்திருப்பின் வடதிசைப்பகுதிக்கே
எல்லை கூறியிருப்பார். தென்குமரியென்று நிலவெல்லை வரையப்பட்டிருத்தலின், தொல்காப்பியர்
காலத்து நீண்டநிலப்பரப்பும் பிறவும் குமரிக்குத் தென்பால் கிடந்தமை தெளிவு.
Pl. Donate:
R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD
……………………………………தொடரும் …………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக