வியாழன், 25 செப்டம்பர், 2025

தமிழமுது –132. – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்......”வடவேங்கடம் தென்குமரி- பனம்பாரனார்.”

 

தமிழமுது –132. –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம்:”

”வடவேங்கடம் தென்குமரி- பனம்பாரனார்.”

மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார்.

”வடவேங்கடந் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து..”

அகலவுரை:

வடக்கே திருவேங்கட மலையின் வட பகுதி, தெற்கே குமரிமலையின் தென்பகுதி, கிழக்கும் மேற்கும் கடல்கள். இந்நான்கும் எல்லையாக, இவற்றுக்கு உட்பட்ட பெருநாடே தமிழ் மொழி பேசும் நன்மக்கள் வாழும் நிலமாகும்.

 

திறனுரை:

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து” என்பதன் விளக்கம். கிழக்கும் மேற்கும் கடல்கள்; நிலங்கள் இல்லை; ஆதலின்  இத்திசைகளுக்கு எல்லை வெளிப்படை, வேங்கட மலையின் வடபகுதிவரையும் குமரிமலையின் தென்பகுதி வரையும் தமிழக எல்லைக்கு உட்பட்டன என்பது வடவேங்கடம், தென்குமரி என்ற அடைகளின் கருத்து. வடவேங்கடத்துக்கு வடக்கிலும் தென்குமரிக்குத் தெற்கிலும் வேற்று மொழிகளும் வேற்றரசுகளும் தொல்காப்பியர் காலத்து இருந்தன ; ஆதலின் இந்த இரு திசைகளுக்கு மட்டும் நிலவெல்லைகள் குறித்தார்.

 

 இதனையுட்கொண்டே, “ நாற்பெயரெல்லை யகத்தவர் வழங்கும்  யாப்பின் வழியது” என்று தொல்காப்பியர் செய்யுளியலில் தெரிவிப்பர். இன்று காண்பதுபோல் தெற்கும் குமரிக்கடலாக இருந்திருப்பின் வடதிசைப்பகுதிக்கே எல்லை கூறியிருப்பார். தென்குமரியென்று நிலவெல்லை வரையப்பட்டிருத்தலின், தொல்காப்பியர் காலத்து நீண்டநிலப்பரப்பும் பிறவும் குமரிக்குத் தென்பால் கிடந்தமை தெளிவு.

 

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக