திங்கள், 24 செப்டம்பர், 2018


திருக்குறள் -சிறப்புரை :1000
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று. – ௧000
(கலம் தீமையால் திரிந்தற்று)
பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம் தூய்மையற்ற கலத்தின் தன்மையால் நல்ல பாலும் கெட்டுப் பயனற்றுப் போவதைப் போல் அப்பெருஞ் செலவமும் யார்க்கும் பயன்படாது போகும்.
“நல்லார்கண் பட்ட வெறுமையின் இன்னாதே
 கல்லார்கண் பட்ட திரு. குறள். -408.
கல்வியறிவிற் சிறந்த சான்றோரை வருத்தும் வறுமைதரும் துன்பத்தைவிடக் கல்லாதவர்கள் கையில் கிடைத்த பெருஞ் செல்வம் மிக்க துன்பத்தைத் தரும்.

1 கருத்து:

  1. எளிமையான விளக்கத்துடன் திருக்குறள் பதிவுகள் மிக சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு