சனி, 29 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1005


திருக்குறள் -சிறப்புரை :1005
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல். ---- ௧00௫
இல்லாதார்க்குக் கொடுத்தும் தானும் துய்த்து  மகிழ்தலும் இல்லாது, அவல நிலையில் உள்ளவர்கள் பல கோடிப் பொருள் வளம் பெற்றிருந்தாலும் அவற்றால் ஒரு பயனும் இல்லை.
“பெரிய ஓதினும் சிறிய உணராப்
பீடுஇன்று பெருகிய திருவின்
பாடுஇல் மன்னரைப் பாடன்மார் எமரே.” ---புறநானூறு.
பலவாறு எடுத்துக்கூறினும் சிறிதளவாயினும் உணரும் உணர்ச்சி இல்லாத, பெருஞ் செல்வத்தைப் பெற்றுள்ள பெருமை இல்லாத மன்னர்களைப் புலவர்கள் பாடாதிருப்பாராக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக