வெள்ளி, 28 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1004


திருக்குறள் -சிறப்புரை :1004
எச்சமென்று என் எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன். ---- ௧00௪
இல்லாதார்க்கு ஒரு பொருளையும் கொடுக்காத கல்மனத்தன், ஒருவராலும் விரும்பப்படாதவன் ஆவான். அத்தகையவன்,   தான் இறந்தபின் தனக்கென இந்நிலவுகில் எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவான்..?
“நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார் செல்வரும்
 நல்கூர்ந்தார் ஈயார் எனின். ---நாலடியார்.
வறுமையுற்ற காலத்தும் பிறரிடம் சென்று இரந்து நில்லாதார்  செல்வம் உடையராவர் ; நிறைந்த செல்வ வளம் இருந்தும் ஒன்றும் ஈயாதவர் எனின் அவரே மிக்க வறுமை உடையோராவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக