சனி, 29 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -93

மெய்ப்பொருள் காண்பது அறிவு -93
பிளேட்டோ (Plato) கி.மு. 428 – 347.

சாக்ரடிசின் மாணவர். சாக்ரடிசின் கருத்துகளை நூலாக்கியவர். பிளேட்டோவின் அரசியல் தத்துவம் உயர்ந்தது.

“காட்டுமிராண்டியாக அன்றி நாகரிகமுள்ள கிரேக்கர்களாகவும் ; அடிமையாக அன்றி உரிமையாளனாகவும் ; பெண்ணாக அன்றி ஆணாகப் பிறந்ததற்காகவும் அனைத்திற்கும் மேலாக சாக்ரடிசின் காலத்தில் வாழும் பெருமை பெற்றதற்காகவும் கடவுளுக்கு நான் கடப்பாடு உடையவன்” என்றார்.

பிளேட்டோ செல்வக்குடியில் பிறந்தவர். தன் ஆசான் நஞ்சுண்டு இறந்தபின் அங்கிருக்க விரும்பாது அறிவிலிகள் நடத்திய கும்பல் ஆட்சியை வெறுத்து வெளியேறினார். உலகநாடுகளைச் சுற்றிய 
பின்பு ஏதென்சு திரும்பினார். அறிஞர்களை உருவாக்கக் கல்விக்கழகம் 
(அகாடமி) நிறுவினார்.

கருத்துமுதல்வாதம்

 பிளேட்டோவின் தத்துவ அமைப்பு ‘கருத்துமுதல்வாதம்’. கருத்துகளே எல்லாவற்றிற்கும் முதன்மையானவை. கருத்தே உறுதிப் பொருள். இக்கருத்துகள் யாவும் வெறும் வடிவங்களே. அவை ஆக்கப்பட்டவை அல்லஎன்பதால் அழியக்கூடியவையும் அல்ல. இக்கருத்துகளை அறிவால் அறிய முடியுமே தவிர புலன்களால் நுகரமுடியாது.” …தொடரும்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக