புதன், 26 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1002


திருக்குறள் -சிறப்புரை :1002
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு. ----- ௧00௨
இவ்வுலகில் பொருளால் எல்லாம் கைகூடும் என்று மயங்கிப் பிறருக்கு ஒன்றும் கொடுக்காமல் பொருளைப் பூட்டி வைத்திருக்கும் ஒருவன் மனிதப் பிறவியில் இழிந்த பிறவியாவான்.
“ இன்மையின் இன்னாதது இல்லை இலம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்.”  -----நான்மணிக்கடிகை.
 வறுமையைப் போல் துன்பம் தருவது வேறு எதுவும் இல்லை ; வறுமையுற்றார்க்கு இல்லை என்னாது ஈதலைப்போல் திட்பமானதும் வேறு இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக