திங்கள், 17 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -81

மெய்ப்பொருள் காண்பது அறிவு -81                        
சமணம்
சமணர், பிறப்பு பலவென்றும் ஒரு பிறப்பின் கன்ம பலன்களுக்கு ஏற்ப மறுபிறப்பு அமைகின்றதென்றும் கொள்வர்.
 கன்மங்கள் தாமாகவே தத்தம் பலன்களைத் தரவல்லன, அதற்குக் கடவுள் ஒருவர் வேண்டா.
வீடு பேற்றிற்கு விரதங்கள் ஐந்து அவசியம். இவை ஐந்தனுள்ளும் அகிம்சையே தலையாயது. பிற உயிர்க்கு அணு அளவும்கூடத் தீங்கு செய்யார்.
படைப்புத் தொழிலைக் கொடுத்து இறைவனை மனித நிலைக்குத் தாழ்த்த விரும்பாத சமணர், மனிதனை அதாவது கேவல ஞானம் எய்திய பரிபூரண மனிதனைக் கடவுள் நிலைக்கு உயர்த்திக் கடவுளாக்கி வழிபடுகின்றனர்.
கடவுள் இல்லையென்னும் வாதம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. சமண சமயத்தை விளக்கியவர் வர்த்தமானர் ( மகாவீரர் – கி.மு. 599)
பொருள்களின் முடிவுகள் பலவாகலாம் ; ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையிலிருந்து நோக்கச் சரியானதாகும். இங்ஙனம் பல முடிவுகளை அநேகாந்தங்களை (அநேக+ அந்தங்கள்) ஏற்கும் கொள்கையே அநேகாந்தவாதம் . சமணர்கள் அநேகாந்தவாதிகள் என்றழைக்கப்படுவர்.
சமணர்களின் அரிய பெரிய தமிழ்த்தொண்டு என்றும் ஏற்றுப் போற்றற்குரியதாக நின்று நிலவுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக