புதன், 12 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :988


திருக்குறள் -சிறப்புரை :988
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். --- ௯௮
சான்றாண்மை என்னும் மனவலிமை ஒருவனுக்கு உண்டாகிவிட்டால் துன்பம் தரும் வறுமை கூட அவனுக்கு இழிவாகாது.
“ திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
 உருத்த மனத்தோடு உயர்வு உள்ளின் அல்லால்
 அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்று
 எருத்து இறைஞ்சி நில்லாது மேல். “ –நாலடியார்.
 திருமகள் தன்னைக் கைவிட்டாலும் தெய்வம் சினந்து ஒதுக்கினும் சோர்வறாத மனத்தோடு தன் சான்றாண்மையை நினைப்பதே அல்லாமல் செல்வத்தைச் சேர்த்து வைத்திருக்கின்ற அறிவில்லார் பின்சென்று தலை தாழ்ந்து நிற்க மாட்டார்கள் மேலானவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக