ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -87

மெய்ப்பொருள் காண்பது அறிவு -87
கிரேக்கச் சிந்தனையாளர்கள்
கிரேக்கர்களின் தத்துவக் கோட்பாடுகள், மேலைநாட்டுத் தத்துவக் கோட்பாடுகள் அனைத்திற்கும் வித்தாக அமைந்துள்ளன. கிரேக்கர்களின் சிந்தனை ஆற்றலும் அறிவுத்திறனும் காலத்தால் அழிக்கமுடியாத சிறந்த தத்துவங்களை ஏற்படுத்தன. கிரேக்கச் சிந்தனையாளர்கள் பலரும் உண்மையான தத்துவ ஞானிகளாக எவருக்கும் அஞ்சாத , எளிய இனிய வாழ்க்கை நடத்தியவர்கள். சமயச் சார்பில்லாது நடுநுன்று சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் பண்டைய கிரேக்கர்கள்.
தேலிஸ் (Thales ) கி.மு. 6.
இவ்வுலகம் எதனால் ஆயது என்ற வினாவை எழுப்பிய முதல்வர் இவரே. இவ்வுலகம் நீரால் ஆனது என்றும் நீரே எல்லாப் பொருள்களுக்கும் மூலகாரணம் என்றும் கூறினார்.
கதிரவனும் விண்மீன்களும் வணக்கத்திற்குரிய கடவுளர் அல்லர் ; அறிவுக்கண்கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டிய நெருப்பின் துகள்கள் என்றார்.
அனைத்தும் ‘ஆன்மா’ என்பது தேலிசின் கொள்கை. எல்லாப் பொருள்களுக்கும் உயிர் உண்டு என்னும் இக்கோட்பாடு ’ஐலோசோயிசம்’ எனப்படும்.  -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக