சனி, 22 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :998


திருக்குறள் -சிறப்புரை :998
நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை.--- ௯௯௮
(நண்பு ஆற்றார் ஆகி ; பண்பு ஆற்றார் ஆதல்)
தம்மொடு நட்பு கொள்ளாது நன்மையல்லாத செயல்களைச் செய்வாரிடத்தும் தாம் பண்புடன் ஒழுகாதிருத்தல் பண்புடையார்க்கு உரிய செயலன்று.
“இன்னா செய்தாரை ஒறுத்தல்  அவர்நாண
நன்னயம் செய்து விடல் –குறள் -314.
தமக்குத் துன்பம் தருவனவற்றைச்செய்தவர்க்கு அவர் நாணும்படி நன்மையானவற்றைச்  செய்து அவர் செய்த தீமைகளையும் மறந்துவிடுதல் வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக