வியாழன், 27 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -91

மெய்ப்பொருள் காண்பது அறிவு -91
சாக்ரடிசு (Socrates) கி.மு. 469 – 399.

உண்மை உயிரினும் மேலானது – நஞ்சுண்டபோதும் உண்மை பேசியவர் – ஏடெத்து எழுதவில்லை – தெருவோரப் பரப்புரை – பல 

அறிஞர்களை உருவாக்கிய அறிஞர் -  ஏன்…எப்படி… என்ற வினாக்களைத் தொடுத்து உண்மையை உணர்த்தியவர் – சொல்லும் நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்துக் காட்டியவர்- கொள்கைக்காவே வாழ்ந்தவர்.

ஏதென்சு ; பல அறிஞர்களைக் கண்டது – வணிக மையம் – செல்வச் செழிப்பு – பண்பாட்டுக் கலப்பு – சிந்தனைக் களம் -

பேரண்டத்தின் தோற்றம், இயல்பு பற்றி, மனிதன் சிந்திக்கத் தொடங்கிய இடம்.

இளைஞர்களுக்குத் தத்துவ தாகம் ஏற்படச் செய்தவர் சாக்ரடிசு.

‘ஈடும் எடுப்புமில்லா நற்பேரறிஞன் சாக்ரடிசு’ – என்பது கிரேக்க நாட்டுத் தெய்வ வாக்கு.

”எனக்கு எதுவும் தெரியாது என்பதே எனக்குத் தெரிந்த ஒன்று” என்று கூறியவர். ‘உன்னையே நீ அறிவாய்’ – இவரின் உயர்ந்த கோட்பாடு. 

‘அறியாதன பல உண்டு எனப்பலரை அறியச் செய்தவர். மனிதனைப் பற்றிய சிந்தனையே முதன்மையானது –என்றார். ----தொடரும்…. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக