புதன், 19 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :995


திருக்குறள் -சிறப்புரை :995
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு. --- ௯௯௫
விளையாட்டாகக்கூடப் பிறரை இகழ்வது  துன்பம் தருவதாகும் . பண்புடையார், பகைவர் மாட்டும் பண்பு உள்ளது என்று அவரையும் இகழ மாட்டார்.
“நகையினும் பொய்யா வாய்மை பகைவர்
புறஞ்சொல் கேளாப் புரைதீர் ஒண்மை.”--- பதிற்றுப்பத்து.
விளையாட்டாகக்கூடப் பொய் கூறுதலை அறியாமைக்குக் காரணமான வாய்மையும் பகைவரது புறங்கூறும் சொல்லைக் கேளாத குற்றமற்ற சிறந்த அறிவையும் உடையவனே. (செல்வக்கடுங்கோ வாழியாதன்.)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக