வெள்ளி, 28 செப்டம்பர், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -92

மெய்ப்பொருள் காண்பது அறிவு -92
சாக்ரடிசு (Socrates) கி.மு. 469 – 399.
                       மனித மனத்தில் இருக்கும் அச்ச உணர்வை மூலதனமாகக் கொண்டு மதத் தலைவர்களும் ஆட்சியாளர்களும் வாழ்ந்தனர்.
                 நேர்மையே நற்பண்பு  ; நற்பண்பே அறிவு. உலகியல் பொருள்களிலும் போக்கினிலும் வாழ்க்கை நடப்பிலும் வேறுபாடுகளும் முரண்பாடுகளும் நிறைந்திருக்கக் காணலாம். இக்குறைபாடுகளை நீக்கி எல்லாவற்றுக்கும் அடிப்படையாக மாறாது தங்கி நிற்கும் பொதுத் தன்மையைக் காணவேண்டும் என்பது சாக்ரடிசின் நோக்கமாகும்.
                        கைகளை உயர்த்தும் ‘கும்பல் ஆட்சி முறையை” வெறுத்தார். சிந்தனைத் திறனும் அறிவுக் கூர்மையும் இல்லாதவர்கள் அறிஞர்கள் வகுக்கும் சட்ட அமைப்பிற்குள் இருந்து ஆளப்பட வேண்டும் என்றார்.
நாத்திகன்
                     சாக்ரடிசு நாத்திகன், தேசத்துரோகி, இளைஞர்கள் மனத்தில்  நச்சுக் கருத்துகளை விதைத்தவன் என்று குற்றம் சாற்றினர். “ஒன்றே கடவுள் என்பது குற்றமென்றால் ; சிந்திக்காது செயல்படும் கண்மூடிப் பழக்கம் ஒழிய வேண்டும் என்றது குற்றமென்றால் நான் குற்றவாளியாகவே இருக்க விரும்புகிறேன்.” என்றார்.
மதவாத அரசு சாக்ரடிசுக்கு மரணதண்டனை அளித்தது .  சிந்தனைத் திறனில்லாதவர்கள் எடுத்த அவசர முடிவால் ‘ஞான உரு ஒன்று அழிந்தது’.
ஏதென்சு நகரம் என்றோ இழைத்த அநீதிக்கு மனித இனம்  மனம் நோக இன்றும் வருந்துகிறது; மன்னிப்பு வேண்டி சாக்ரடிசிடம் மண்டியிடுகிறது. -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக