வியாழன், 20 செப்டம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :996


திருக்குறள் -சிறப்புரை :996
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். ---- ௯௯௬
பண்புடையார் இவ்வுலகில் தோன்றி வாழ்வதால்தான் உலகம் நிலை பெற்றிருக்கிறது.   அவ்வாறு அவர்கள் தோன்றாது போனால் இவ்வுலகம் மண்ணில் புதைந்து அழிவது உறுதி.
” இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப
இடைத் தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தென
கொடைக் கடன் இறுத்த செம்மலோய் …”----மலைபடுகடாம்.
நன்று இது, தீது இது என ஆராய்ந்தறியும் பெரியோர் இறந்து போக, உலகம் உள்ளவரை யாண்டும் நிலைத்து நிற்கும் கொடையாகிய கடமையைச் செய்து முடித்த செம்மல். (நன்னன்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக